Sms ch 61 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 61 சத்யா நந்தனின் அரவணைப்பில் அழுது ஓய்ந்து மீண்டும் பேசினாள். “துரைசாமி எப்படி உங்களுக்கு வீடியோ அனுப்பினார்?” “துரைசாமி உன்னை தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக ராகவனின் காவல் துறை நண்பர்களை வைத்து காரில் வேகமாக சென்றார் என்ற முறையில் அமைந்தகரை பக்கம் வரக்கூடாது என்று சொல்லி அவரை மிரட்டி இருந்தோம்” “அதனால் தான் துரைசாமி அந்த பக்கமே வருவதில்லையா?” என்று அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து கேட்டாள். “ஆமாம், பிறகு ஒருநாள் உன்னுடைய வீடியோக்கள் சில இருப்பதாகவும், அதற்கு ஒரு தொகையை நான் தராவிட்டால் அவற்றை நெட்டில் பரவ விடுவதாகவும் என்னை மிரட்டினார், இது குறித்து போலீசிடம் நான் சென்றால் வேறு ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவேன் என்று சொன்னார், அந்த ஆயுதம் உன் இருப்பிடத்தை ஷ்யாமிடம் காட்டி கொடுப்பது தான் என்று ஊகித்து இருந்தேன், நான் அவருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வீடியோக்களை வாங்கி கொண்டது மட்டுமில்லாமல் அவர் மகளின் சிகிச்சைக்கும் உதவினேன், ஷ்யாம் இங்கே வந்து உனக்கு ஊசி போட்டு பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் துரைசாமியை விசாரிக்க அழைத்த போது உயிருக்...